Uchakattam Movie : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள உச்சக்கட்டம் படத்தின் இயக்குனர் சுனில் குமார் தேசாய் மற்றும் இப்படத்தின் ஹீரோவான தாகூர் அனூப் சிங் பற்றிய பல சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உச்சக்கட்டம் என்ற பெயரில் தமிழிலும் உத்கர்ஷா என்ற பெயரிலும் உருவாகியுள்ள திரைப்படம் வரும் மார்ச் 22-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் தாகூர் அனூப் சிங். இவர் சிங்கம் 3 திரைப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.
இவர் நடிப்பை தாண்டி தன்னுடைய உடலை பராமரித்து கொளவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர். ஆணழகனாக பல விருதுகளையும் வாங்கி குவித்தவர்.
குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் இந்தியா, தாய்லாந்து, உஸ்ப்பிகிஸ்தான் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் சிறந்த ஆணழகனாக தேர்வாகி தங்கம், வெள்ளி உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளர்.
மேலும் இப்படத்தின் இயக்குனரும் சிறந்த படங்களை கொடுத்து பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். அது குறித்த சில தகவல்கள் இதோ உங்களுக்காக
திரில்லரான திரைப்படங்களை கொடுப்பதில் வல்லமை படைத்தவர் சுனில் குமார் தேசாய். இதுவரை பல திரில்லர் படங்களை இயக்கியுள்ளார்.
சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என இதுவரை 5-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் 4 பிலிம்ஸ் ஃபேர் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இதுவரை இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை தொடர்ந்து தற்போது உச்சக்கட்டம் என்ற பெயரில் தமிழிலும் உத்கர்ஷா என்ற பெயரில் மற்ற மொழிகளிலும் இயக்கியுள்ளார்.
இந்த படமும் ஆக்ஷன், காதல், காமம், கொலை, மர்மம் திரில்லர் என அனைத்தும் அடங்கிய படமாக இயக்கியுள்ளார். அனூப் சிங்குடன் சேர்ந்து சாய் தன்ஷிகா, தன்யா ஹோப் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.