bore well

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவர் கட்டிட தொழிலாளியான் 2 வயது சுர்ஜித் வில்சன் நேற்று விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 600 அடி ஆழ்துணை கிணற்றில் விழுந்து விட்டான். விழுந்தவுடன் மண்ணில் உராய்ந்தபடி சிறுவன் ஆழ்துளைக்கிணற்றின் அடிப்பகுதிகு சென்றுவிட்டான்.

எனவே, சிறுவனின் பெற்றோர் பதறியடித்து அங்கு ஓடிச்சென்றனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். 4 பொக்லைன் உள்ளிட்ட 5 எந்திரங்கள் மூலம் 15 அடி வரை குழி தோண்டப்பட்டு நேற்று இரவு முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழிக்குள் சிசிடிவி கேமாராவை பொருத்தி சிறுவனை கண்காணித்தும் வருகின்றனர்.

ஆனால், குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே, தற்போது ஐஐடி குழுவின் நவீன கருவி ஆழ்துளை கிணற்றில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனையாக இருக்கிறது.