திருநங்கை-யை மணந்த வாலிபர் : தூத்துக்குடியில் நடந்த சம்பவம்!!
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த அருண்குமார், ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அதேபோன்று, தூத்துக்குடியில் ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்தவர் ஸ்ரீஜா என்கிற திருநங்கை, கல்லூரியில் ஆங்கில பட்டபடிப்பு படித்து வருகிறார்.
இவரும், அருண் குமாரும் கடந்த 6 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
அதன்பின் இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்க்கு தெரியவர, ஒரு வீட்டார் சம்மதத்துடன், ஸ்ரீஜாவும், அருனும் திருமணம் செய்ய முடிவெடுத்து, தூத்துக்குடியில் உள்ள ரமேஷ்வரர் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தனர்.
திருக்கோவில் அலுவலகத்தில் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு, அருண் குமாரும் ஸ்ரீஜாவும் சிவன் கோயில் வந்தனர்.
அப்போது திருக்கோவில் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள், இவர்களது திருமணம் இந்த கோவிலில் நடத்த அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.
இதனால் அருண், ஸ்ரீஜா மற்றும் உடன் வந்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணத்தை ஏன் கோவிலில் நடத்த முடியாது, திருமணத்தை அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளோம் என்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் சரியான பதிலை கூறவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கோவில் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், “திருநங்கைகள் மற்றும் கோவில் அலுவலக அதிகாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி காலை 11.45 மணியளவில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்”. இதனால் மகிழ்ச்சி அடைந்த திருநங்கைகள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.