Modi Vs Trump : ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் உலக நாடுகளுக்கு டிரம்ப் , ஈரான் இடமிருந்து இறக்குமதி செய்யகூடாது என 10 நாட்கள் கெடு வைத்துள்ளார்.
அந்த 10 நாட்கள் கெடு முடியும் நேரத்தில், உலக நாடுகள் பொருளாதார தடையை சந்திக்கும் சூழல் ஏற்படும் என டிரம்ப் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும், அந்த ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமான செயல் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது, ஆனால் மற்ற நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நவம்பர் 5 ஆம் தேதிக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் ,ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இந்தியா வாங்கும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே கூறியிருந்தார் .
இந்நிலையில் டிரம்ப் கூறியிருப்பதாவது, ” அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி விதிமீறல் ஈடுபடும் ஈரானின் கச்சா எண்ணெய் மற்ற நாடுகள் இறக்குமதி செய்யகூடாது என தொடர்ந்து நாங்கள் வற்புறுத்தி வருகிறோம்.
அமெரிக்கா கொடுத்த கெடு இன்னும் 10 நாட்களில் முடிய உள்ளது, அனைத்து நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தி கொள்ளவேண்டும்.
இல்லையெனில், உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.