Trisha KRishnan : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.
ஆனால் இதே துறையில் ஒரு நடிகை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே லைம் லைட்டில் நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
இந்த அசாத்தியத்தை தனது விடாமுயற்சியால் சாத்தியமாக்கி 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் ஆச்சரிய நாயகியாக உருமாறியிருக்கிறார் த்ரிஷா.
அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு அண்மையில் வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்தார்.
இனி த்ரிஷாவின் வாழ்நாள் கதாபாத்திரம் ஜெஸ்ஸியா ஜானுவா என விவாதிக்கும் அளவு ஜானுவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் த்ரிஷா.
தற்போது அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இப்படத்தை எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.
மேலும் இப்படத்திற்கு ராங்கி என தலைப்பு வைத்துள்ளனர். நேற்று இப்படத்தின் டைட்டிலை த்ரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.