Trichy Vijay Fans : தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து தளபதி ரசிகர்கள் செய்துள்ள செயல்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ்கத்தில் கடந்த புத்தாண்டு தினம் முதல் முற்றிலுமாக பிளாஸ்டிக் கவர், பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடைக்கு பிறகு பல இடங்களில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளது. இன்னும் மக்கள் பலருக்கு இது குறித்த சரியான விழிப்புணர்வும் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விஜயின் முகம் பொறிக்கப்பட்ட துணிப்பைகளை கடைகளில் இலவசமாக கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் இந்த செயல் அப்பகுதியில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமில்லாமல் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தளபதி ரசிகர்களை நினைக்கவே பெருமையா இருக்கு..????????#ThalapathyVijay #sarkar pic.twitter.com/WrNtbdmX7M
— ????????அகில இலங்கை விஐய் நற்பணி மன்றம் ???????? (@SLVFC_Official) January 4, 2019