பொன்னியன் செல்வனின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான பொன்னியின் செல்வன் கதை களத்தை அதே தலைப்போடு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

அண்மையில் இப்படத்தில் போஸ்டர் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரிவபூர்வமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை புதிய போஸ்டருடன் லைக்கா நிறுவனத்தின் twitter பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.