Tn Govt Pongal Gift
Tn Govt Pongal Gift

Tn Govt Pongal Gift – சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், பொங்கல் பண்டிகையை ஒட்டி திருவாரூரிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்தார்.

இதனால் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

இதையடுத்து ‘திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது’ .

இந்நிலையில், கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, “திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தும், தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்திவைக்குமாறும் தலைமை தேர்தல் ஆணையம் இன்று காலை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது”.

மேலும் அனைத்து இடங்களிலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து அட்டைக்கும் ரொக்கபரிசு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

அதேபோல, ‘திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் சேர்த்து ரொக்கபரிசு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது’.

அதற்கான பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.