தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்களை கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
TN CM Wishes to Ayutha Pooja : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சீரும் சிறப்புமாக ஆட்சியை செயல்படுத்தி வருகிறது.
இந்தக் கொரானா பேரிடர் காலத்தில் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறது
இந்த நிலையில் தமிழகமெங்கும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது மற்றும் நாளை விஜயதசமி திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துக்களைக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நவராத்திரிரி பண்டிகையின் 9,10வது நாளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தி எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.