மதுரை மாநகரின் பொருளாதாரத்தை தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
TN CM Speech in Madurai : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மதுரை மாநகரின் வளர்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்ட பணிகளை பற்றி பேசினார்.
இன்று மதுரையில் கே புதூர் தொழில் பேட்டை, கப்பலூர் தொழிற்பேட்டை, கப்பலூர் மகளிர் தொழிற் பேட்டை என 3 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று தொழிற்பேட்டைகளில் 535 தொழிற் கூடங்கள் இயங்கி வருவதாகவும் இதில் 20 ஆயிரத்துககும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று அம்மாவின் அரசு உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக மதுரையில் கபே நிறுவனம் ரூபாய் 500 கோடி முதலீட்டில் டிராக்டர் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
HCL நிறுவனம் ரூபாய் 500 கோடி முதலீட்டில் 900 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மென்பொருள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
பெண் குயின் புரோடக்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 400 கோடி முதலீட்டில் கார்மெண்ட்ஸ் பணிகளை தொடங்கியுள்ளது.
செயின்ஸிஸ் மென்பொருள் நிறுவனம் 34 கோடி ரூபாய் முதலீட்டில் மென்பொருள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
அவசரகால கூடுதல் கடன் திட்டத்தின் கீழ் 150.42 கோடி ரூபாய் 10,951 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் நிவாரணமாக 23 குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 7.45 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 356.46 லட்சம் ரூபாய் செலவில் கே புது தொழிற்பேட்டையில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.
இது போன்று பல்வேறு திட்டங்களின் மூலமாக மதுரையில் பொருளாதாரத்தைப் பெருக்கவும் அம்மாவின் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரின் பொருளாதாரத்தை தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.