TN CM Order on Bhavani Sagar Dam Water Supply
TN CM Order on Bhavani Sagar Dam Water Supply

CM Order on Bhavani Sahar Dam Water Supply : ஆகஸ்ட் 1 முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையிலிரந்து ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

முதல் படத்துக்கே இத்தனை கோடிகளா?? மிரள வைக்கும் தளபதி விஜய் மகனின் சம்பளம் – மாஸ்டர் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக பாசனத்திற்கு 1.8.2020 முதல் 28.11.2020 வரை 120 நாட்களுக்கு 8812.80 மி.கன அடி தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.