கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செப்டம்பர் 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
TN CM Meets Medical Team on Sep29 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இருப்பினும் தமிழக அரசு எடுத்து வரும் துரிதமான நடவடிக்கைகள் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
தற்போது 46 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவிலும் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 29ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி – அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் புதிய மசோதா!
அதன் பின்னர் ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஊரடங்கை கடுமையாக்க வாய்ப்பில்லை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.