சேலம் அஸ்தம்பட்டி பொதுத்துறை மாளிகையில் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
TN CM Meeting in Salem : கொரானா வைரஸ் பரவல் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு எடுத்து வரும் துரித நடவடிக்கைகளால் பலர் பூரண குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் தற்போது குருநாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டு உள்ளார்.
மதுரை திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்த அவர் இன்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்துஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் திரு சி.அ ராமன் அவர்களும் உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.