மக்களை நேரில் சந்திப்பது பெருசா வீட்ல உட்கார்ந்துட்டு வீடியோ கான்பரன்ஸ்ல பேசுறது பெருசா என ஸ்டாலினை விளாசி எடுத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
TN CM EPS Question to Stalin : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் தொற்றையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திற்கான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வாணியம்பாடியில் அம்மா கிளினிக்கை தொடங்கி வைத்தார். அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வாரிசுகள் இல்லை. மக்கள் தான் அவர்களுடைய வாரிசுகள்.
இந்த கொரானா பேரிடர் காலத்தில் நான் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். மக்களை நேரில் சந்திப்பது பெருசா? வீட்டில் அமர்ந்து வீடியோ கான்பரன்சிங் காலில் பேசுவது பெருசா என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.