TN CM EPS Condolences to Salem Anbazhagan Family
TN CM EPS Condolences to Salem Anbazhagan Family

TN CM EPS Condolences to Salem Anbazhagan Family : சேலம் மாவட்டத்தில் திரு அன்பழகன் என்பவரின் வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானது குறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், நரசோதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. அன்பழகன் என்பவரின் வீடு 3.9.2020 அன்று நள்ளிரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த திரு. அன்பழகன் என்பவரின் மனைவி திருமதி புஷ்பா, திரு. சேட்டு என்பவரின் மகன் திரு. கார்த்திக், திரு. கார்த்திக் என்பவரின் மனைவி திருமதி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ் மற்றும் முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

அடேங்கப்பா நடிகை ரோஜாவின் மகளா இது? என்ன ஒரு அழகு – ரசிகர்களை வியக்க வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!(Opens in a new browser tab)

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.