தனிமைப்படுத்தப்பட்ட டிக் டாக் சூர்யா தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tik Tok Surya Admitted in Hospital : தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு இணையாக புகழைத் தேடிக் கொடுக்கும் செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என ஆசைப்படும் கலைஞர்கள் தற்போது இதன் மூலமாக தங்களது திறமைகளை வெளிக்காட்ட தொடங்கியுள்ளனர்.
அதேசமயம் கூடவே இந்த டிக் டாக் செயலியில் ஆபாசமும் அசிங்கமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சூர்யா என்பவர் இந்த திட்டம் மூலமாக மிகவும் பிரபலமான அவர்களில் ஒருவர்.
ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்ற இவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா
அதன் பின்னர் சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வந்தபோது சூர்யாவும் அவரது திருப்பூர் வீட்டிற்கு வந்தடைந்தார்.
இவர் திருப்பூர் வீட்டிற்கு வந்தடைந்ததும் அங்கிருந்தவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சூர்யாவை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஆனால் தனக்கு கோயம்புத்தூரில் கொரானா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அதில் கொராணா உறுதியாகவில்லை எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சூர்யா வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது குறித்து பிரபல செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனால் சூர்யா அந்த செய்தி வாசிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். அதன் பின்னர் அந்தச் செய்தியாளர் சூர்யாவின் மீது போலீசில் புகார் அளிக்க அவர் மீது கொலை மிரட்டல் பிரிவில் வழக்கு பதிந்தது.
இதனால் சூர்யா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் டிக் டாக் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.