ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை மூலம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களுக்கு துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது கேப்டன் என்று ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.

தற்போது திடீர் என்று ஏற்பட்ட  உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை மூலம் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியான தகவலை கேட்ட ரசிகர்கள் எப்போதும் தனி காட்டு ராஜா போல் நடிப்பிலும், அரசியலிலும் திகழ்ந்த கொண்டிருந்த விஜயகாந்திற்கு இப்படி ஒரு நிலைமையா என்று ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.