மாநாடு படத்தின் வசூல் நிலவரம் அறிவிப்பதில் சிம்பு செய்த வேலையால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா என பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படம் 100 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் படம் 71 கோடி ரூபாய் மட்டும்தான் வசூல் செய்தது என தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் படம் 100 கோடி வசூல் செய்தது என அறிவிக்க வேண்டும் என சிம்பு சொன்னதால் தான் அவ்வாறு கூறியதாக தயாரிப்பாளர் தெரிவித்ததாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த தகவலால் நடிகர் சிம்பு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.