Thirumavalan Speech About Lord Muruga

தைப்பூசத்திற்கு லீவு விட்டா தமிழனா தலைநிமிர்ந்து விடுவோமா என தொல் திருமாவளவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thirumavalavan Speech Abour Lord Muruga : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தைப்பூசத் திருநாளை அரசு பொது விடுமுறையாக அறிவித்து இருந்தார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் கூட்டமொன்றில் முருகன் மட்டும் தமிழ் கடவுள் என்று சொல்லி தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டுவிட்டால் தமிழர்களாக நாம் தலை நிமிர்ந்து விடுவோமா… ?

முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரது அண்ணன் விநாயகர் என்ன இந்தி கடவுளா? இதில் ஏதோ கட்டுக்கதை உள்ளது போலவே தெரிகிறது

எல்லாம் ஓட்டுக்காக !

விநாயகரும் முருகனும் ஒரே அப்பனுக்கும் அம்மாவுக்கும் பிறந்தவர்கள் தானே, அவருக்கு (சிவனுக்கு) இரண்டு மூன்று மனைவிகள் இருக்கலாம் – ஆனால் பிள்ளைகள் இரண்டு தானே?

ஏன் விநாயகரை நாம் தமிழ் கடவுள் என்று சொல்லவில்லை இதையெல்லாம் நம்பி ஓட்டுப் போட்டால் சிக்கிக் கொள்வோம் என பேசியுள்ளார்.

இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் வகையில் இவருடைய இந்த பேச்சு இருப்பதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக திருமாவளவன் பேசுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.