There was 3kg of gold at the Chennai airport
There was 3kg of gold at the Chennai airport

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3கிலோ மதிப்புள்ள தங்கம் கேட்பாரற்று கிடந்துள்ளது., தகவல் அறிந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு மறைமுகமாக தங்க நகைகள் கடத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இந்த கடத்தல் நகைகள் அதிகமாக பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடதக்கது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யும், பன்னாட்டு விமான நிலைய சுங்க சோதனை பகுதியில் ஒரு பை யாருமின்றி கேட்பாராற்ற நிலையில் கிடந்துள்ளது.

இதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பையை சோதனை செய்ய திறந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள், யார் தங்கத்தை கொண்டுவந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதுதொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 87.5 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் அது தொடர்பாக 7 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.