Thejas Flights in Pakistan Border : பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை குவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கிழக்கு லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இதை அடுத்து எல்லைகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதேசமயம் லடாக் எல்லை அருகே J-20 ரக போர் விமானங்களை சீனா நிறுத்தியதை அடுத்து இந்தியாவும் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்தி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் எந்த ஒரு அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு எல்லையில் தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் அண்மையில் தமிழகத்தில் சூலூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டனர். அந்த விமானங்கள் தற்போது பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.