தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் வகுத்துள்ள புதிய விதிகளை பின்படுத்தினால் தயாரிப்பாளர்கள் வர்கம் அழிந்து விடும் என இயக்குனர் பாரதி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Theater Owners Council :
தமிழ் சினிமாவில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தியேட்டர் நிர்வாகங்கள் விநியோகிஸ்தர்களுக்கு ஒரு பங்கை அளித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் இந்த விதிகளில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. அஜித், விஜய், ரஜினியை முதல் நிலை நடிகர்கள் எனவும் சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இரண்டாம் நிலை நடிகர்கள் எனவும் தரம் பிரித்து இருந்தது.
தியேட்டர்களில் விஸ்வாசம் படத்தின் நிஜ நிலவரம் – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.!
இவர்களின் படங்களுக்கு இனி எங்கெங்கு எவ்வளவு பங்கு விநியோகிஸ்தர்களுக்கு அளிக்கப்படும் என்பதையும் அறிவித்து இருந்தது.
ஆவேசமான பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் தயாரிப்பாளர்கள் வர்க்கம் அழிவது உறுதி எனவும் நொந்து கொண்டுள்ளார்.