தியேட்டர்கள் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Theater Opening Announcement in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக கொரானா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
இதனால் ஊரடங்கில் தொடர்ந்து அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்களை நவம்பர் 16-ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளைப் பொறுத்தவரை 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.