சனம் ஷெட்டி பிரச்சனை குறித்து தர்ஷன் பதிவிட்டுள்ள பதிவு சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் தர்ஷன்.
இவருக்கும் இவருடைய காதலி சனம் ஷெட்டிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை முடிவுக்கு வராமல் சென்று கொண்டே இருக்கிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிய வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் தர்ஷன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீளமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார், இதில் மகிழ்ச்சியில்லாத உறவில் இருப்பது கடினம், தனித்தனி வழியில் செல்வதே சரியானது.
எனக்கு அவர் மீது ( சனம் ) மரியாதை இருந்தது. ஆனால் தற்போது அவை குறைந்து விட்டன, என்னை பற்றி அறியாத மக்கள் மத்தியில் என் கேரக்டரை விசாரணைக்கு நிறுத்தி விட்டனர். என்னை அழிக்க பார்க்கிறார்கள்.
நான் தற்போது என்னுடைய எதிர்கால வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளேன். இதில் இருந்து நான் பாடம் கற்று கொண்டேன் எனவும் கூறியுள்ளார். என்னுடன் துணை நின்றவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.