பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலும் தர்ஷனும் சேர்ந்து மக்களை ஏமாறியுள்ளனர். இதனை அவரே மேடையில் உளறி கொட்டியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தர்ஷன்.
இவர் தான் டைட்டில் வின்னராவார் என எதிர்பார்த்து ஏமார்ந்தவர்கள் பலாயிரம் பேர் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கமல்ஹாசன் தர்ஷனை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இது தர்ஷனுக்கும் சர்ப்ரைஸ் என்று தான் அன்று கூறினார்கள்.
ஆனால் தற்போது தர்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இறுதி நாளுக்கு முன் நாளே கமல் சார் தன்னை அழைத்து இது பற்றி கூறி விட்டதாகவும் நான் எனது வீட்டிற்குள் தெரியப்படுத்தி விட்டதாகவும் ரசிகர்களுக்கு மட்டும் தெரிய வேண்டாம் என கூறியதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறி விட்டு ஐயோ நானே உளாறிட்டேனே எனவும் சிரித்து சமாளித்து கொண்டுள்ளார்.
மேடையில் நடந்த நாடகம்.. மேடையில் உளறி கொட்டிய தர்ஷன் – வீடியோ.!