கரூரில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய போது ‘அரசியலில் எல்லாமே கலப்படம் தான்’ என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை கூறியுள்ளார்.
கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க் கட்சிகள் கலப்பட கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
அவ்வாறு பேசியது குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த மக்களவை சபாநாயகர் தம்பிதுரை “அரசியலில் எல்லாமே கலப்படம்தான் ” என்று கூறினார்.
அதை தொடர்ந்து, அதிமுகவில் யார் வேண்டுமானாலும் கட்சிக்கு சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பிக்கு கரூர் தொகுதியை கட்சி ஒதுக்கினால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன் என்று கூறினார்.
மேலும் தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது, ‘தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க அதிமுகவில் தனி குழு உள்ளது ஆனால் அந்த குழுவில் நான் இல்லை. எனவே கூட்டணி குறித்து நான் எதுவும் கூற முடியாது’ என்று தெரிவித்தார்.