இரண்டாம் திருமணத்திற்கு பின்பும் தாலி அணியாதது ஏன் என ஜூலி கேட்ட கேள்விக்கு தாமரை செல்வி பதிலளித்துள்ளார்.
Thamarai Selvi About Thaali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக 5-வது சீசனில் பங்கேற்ற தாமரைச்செல்வி கலந்து கொண்டுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதா சம்பத் மற்றும் ஜூலி ஆகியோரிடம் அதிக அளவில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜூலி 2வது திருமணம் ஆகியும் கழுத்தில் தாலி அணியாதது ஏன் என கேட்க அதற்கு பதில் அளித்துள்ளார் தாமரை. நாங்க கவரிங் நகை போட்டு தான் திருமணம் செய்து கொண்டோம். கவரிங் எனக்கு செட்டாகவில்லை அதனால் கழட்டி விட்டேன்.
வீட்டை விட்டு வெளியே போன பிறகுதான் செயின் வாங்கி அணிய வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.