யாரும் வேற கட்சியில் சேராதீங்க, நீங்க நினைத்தது எல்லாம் நடக்கும் என தளபதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான சந்திப்பில் பேசியுள்ளார்.
Thalapathy Vijay Political Plan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விரைவில் அரசியல் களத்தில் கால்பதிக்க போவதாக தகவல் வெளியானது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனால் தளபதி விஜய் கடுப்பாகி தன் தந்தைக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட விவகாரம் அனைவரும் அறிந்ததே.
இப்படியான நிலையில் தளபதி விஜய் அரசியல் குறித்து தன்னுடைய நிலைப்பாடு என்ன அடுத்த கட்ட முடிவு என்ன என்பது குறித்து பனையூர் பண்ணை வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரடியாகவும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசியுள்ளார்.
ஆனந்த் புரூஸ்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தளபதி விஜய் யாரும் மாற்றுக் கட்சியில் சேராதீங்க, நீங்கள் நினைத்ததெல்லாம் விரைவில் நடக்கும் என கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தளபதி விஜயின் அரசியல் களத்தில் விரைவில் இறங்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதே விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.