Thalapathy Vijay : விஜய் கொடுத்த அட்வைஸ் தான் நான் ஹீரோவாக காரணம் என பிரபல நடிகர் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவர் தளபதி விஜயின் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் ராஜா ராணி திரைப்படத்தில் ஜெய் நடிப்பு பலரின் பாராட்டுகளை அள்ளியது.
அந்த அளவிற்கு ஒரு வெகுளி தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் தற்போது அறம் படத்தின் இயக்குனர் கோபி நாயனார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை – வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்.!
இந்த படத்தை பற்றி ஜெய் பேசிய போது, படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்றாற் போல் அமைந்த படங்கள் தான் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி.
நான் பகவதி படத்தில் நடித்த பிறகு விஜய் சாரிடம் அடிக்கடி வாய்ப்பு கேட்டேன். அப்போது அவர் இதே போல் தொடர்ந்து சைடு ரோலில் நடித்து கொண்டே இருந்தால் உன்னை அப்படியே தான் வைத்திருப்பார்கள். அடுத்த கட்டத்துக்கான முயற்சியை எடு, வித்தியாச வித்தியாசமான கதையில் நடி என கூறினார்.
தற்போது ஒரே மாதிரியான ரோலில் நடித்தால் விஜய் சார் சொன்ன விஷயங்கள் தான் நினைவிற்கு வரும் என கூறியுள்ளார்.