Thalapathy Vijay Donates to People
Thalapathy Vijay Donates to People

தளபதி விஜய் கொரானா நிவாரண நிதி அளித்துள்ளார் அது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay Donates to People : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

ரசிகர்களுக்கு போடப்பட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்.. கொரானா பாதிப்புக்கு சத்தமில்லாமல் விஜய் செய்த உதவி, வெளியான அதிரடி உண்மைகள்.!

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வந்த நிலையில் விஜய் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரும் அவருடைய பங்களிப்பு ரூபாய் 1.30 கோடி நிதி அளித்துள்ளார்.

இதனை கீழ்கண்டவாறு பிரித்து அளித்துள்ளார்.

மத்திய அரசு – ரூபாய் 25 லட்சம்
மாநில அரசு – ரூபாய் 50 லட்சம்
கேரளா அரசு – ரூபாய் 10 லட்சம்
பெப்சி அமைப்பு – ரூபாய் 25 லட்சம்
கர்நாடக அரசு – ரூபாய் 5 லட்சம்
ஆந்திரா அரசு – ரூபாய் 5 லட்சம்
தெலுங்கானா அரசு – ரூபாய் 5 லட்சம்
பாண்டிச்சேரி அரசு – ரூபாய் 5 லட்சம்

Thalapathy Vijay Donates to People
Thalapathy Vijay Donates to People