இயக்குனரிடம் விஜய் மன்னிப்பு கேட்டதை பற்றி அவரின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Thalapathy Vijay Asked Sorry to Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ள விஜய் வளர்ந்து வந்த போது நடித்த படங்களில் ஒன்று தான் கோயம்பத்தூர் மாப்பிள்ளை.
விஜய், அட்லீ குறித்து பேசிய கதிர் – என்ன நீங்களும் அதையே சொல்றிங்க .!
விஜயின் அப்பாவுடைய நண்பர் எம்.எஸ்.வி முரளி தயாரிக்க எஸ்.ஏ.சியின் உதவி இயக்குனர் சி ரங்கநாதன் இயக்கி இருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் தனக்கு மேக்கப் போட ரூம் கொடுக்கவில்லை என கோபித்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாராம்.
அதன் பிறகு இந்த விசியம் எஸ்.ஏ.சி-யின் காதுக்கு வர அந்த இயக்குனரிடம் விஜயை மன்னிப்பு கேட்க கூறியுள்ளார்.
அப்பாவின் வார்த்தையை மறுக்காமல் அவரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை எஸ்.ஏ.சி அவர்களே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.