Thalapathy Helps Delta People : டெல்டா மாவட்ட மக்களுக்காக தளபதி விஜய் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரசிகர்களின் வங்கி கணக்கிற்கு நிதி அளித்துள்ளார்.
சமீபத்தில் உருவாகி இருந்த கஜா புயல் கரையை கடக்கும் போது டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை மோசமாக தாக்கியது.
இதனால் 10,000 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்து இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதில் இருந்து தன்னார்வலர்கள். இளைஞர்கள் ஆகியோர் முன் வைத்து உதவி செய்து வருகின்றனர்.
திரையுலக பிரபலன்களான சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி பிரகாஷ் ஆகியோரும் உதவி செய்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் உதவி செய்துள்ளார். தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரசிகர் மன்ற தலைவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார்.
அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து தெரியப்படுத்தி வருகின்றனர்.
ஏழைகளுக்கு எந்நேரமும் உதவும் மனம் கொண்டவர் எங்கள் தளபதி ஒருவரே!
தலைவர் தளபதி விஜய் அவர்களிடமிருந்து வங்கி கணக்கில் ரூபாய். 4.5 லட்சம் வந்துள்ளது.இது போல புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்ட தலைவர்கள் வங்கி கணக்கிலும் பணம் வந்துள்ளது. pic.twitter.com/HsXwmCDj5z
— M Abbas (@thalapathyabbas) November 20, 2018
The Way He Believes His Fans ????????????#ThalapathyForaReason pic.twitter.com/oo3n8zEa5A
— MaduraiONLINE VjFans (@Team_MOVF) November 20, 2018