Thalapathy Fans : உச்சகட்ட ஆக்ரோஷத்தில் மதுரையை சேர்ந்த தளபதி ரசிகர்கள் பொள்ளாச்சி கொடூரத்திற்கு எதிராக போஸ்டர் பேனர்களை வைத்து மதுரையை அதிர வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் உள்ளனர்.
தளபதி 64-ஐ இயக்க போட்டி போடும் 6 இயக்குனர்கள் – வெளியான அதிரடி அப்டேட்.!
பொதுவாக விஜய் ரசிகர்கள் படங்களை மட்டும் கொண்டாடுவதோடு இல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கும் அநீதிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரத்திற்கும் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதற்காக சில பேனர்களை வைத்துள்ளது.
அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக அந்த பேனர்களில் இனி தமிழகத்தில் பாலியல் குற்றம் புரிபவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் துடிதுடிக்க அவர்களின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தளபதி குறித்து திடீரென புகைப்படத்துடன் பதிவிட்ட பார்த்திபன் – வைரலாகும் ட்வீட்.!
விஜய் ரசிகர்களின் இந்த கருத்திற்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.