தளபதி 68 பட தயாரிப்பாளர் தப்பிச்சாரு என பேசியுள்ளார் பிரபலம் ஒருவர்.
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா விஜயுடன் இணைய உள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக இந்த படத்தை அட்லீ இயக்குவதாக இருந்த நிலையில் தளபதி 68 தயாரிப்பாளர் தப்பிச்சாரு, வெங்கட் பிரபு நல்ல இயக்குனர், சுறுசுறுப்பாக நபர் என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.
அட்லி எப்போதும் சொன்ன பட்ஜெட்டில் படம் எடுக்க மாட்டார், செலவை இழுத்து விடுவார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தே கே ராஜன் இவ்வாறு பேசியுள்ளார்.