Nayanthara : தளபதி 63 படப்பிடிப்பின் போது அத்துமீறி உள்ளே நுழைந்த இயக்குனர் ஒருவரால் நயன்தாரா உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது நடந்த சம்பவத்தால் கடும் அப்செட்டில் உள்ளார்.
தளபதி 63 படப்பிடிப்புகள் நாடாகும் இடங்களில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் கூடி கொண்டே இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் துணை இயக்குனர் ஒருவர் அத்துமீறி ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் நுழைந்துள்ளார். நயன்தாராவை பார்த்ததுமே உங்க கிட்ட ஒரு கதை சொல்லணும் என பேச தொடங்கியுளளார்.
இதனால் அப்செட்டான நயன்தாரா அங்கிருந்த பாடி காட்ஸ்களை அழைத்து அவரை வெளியே அனுப்புமாறு கூறியுள்ளார்.
பேண்ட் போட மறந்துடீங்களா? அபர்ணதியை விளாசும் ரசிகர்கள்.!
தன்னுடைய படங்களில் பணிபுரிந்த துணை இயக்குனராக இருந்தும் நயன்தாரா இப்படி செய்தது அந்த இயக்குனரை வேதனையடைய செய்துள்ளது.