Thalapathi M.K.Stalin speech :
சென்னை: சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை, அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று மே 23- ஆம் தேதி அன்று தெரியும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்: ஸ்டாலின் அறிக்கை!
மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனால் 3வது கூட்டணி அமைய உள்ளதா என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அப்போது, அந்த சந்திப்பில் அரசியல் நிலவரம் குறித்து இரண்டு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார்.
அவர் 3-வது அணியை உருவாக்க வரவில்லை. சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் “இந்தியாவில் 3-வது அணி அமையுமா(!?) என்பது எனக்கு தெரியவில்லை. அவ்வாறு அமையுமானால், அதுகுறித்து மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” இவ்வாறு ஸ்டாலின் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.