படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்ல இருக்கும் தளபதி 67 படக்குழுவில் இரண்டு முன்னணி நடிகைகள் கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு நேற்று தெரிவித்ததை தொடர்ந்து இப்படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி 67 படக்குழு படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் அந்த குழுவில் நடிகை திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் கலந்து கொண்டிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.