Thalaivar Rajinikanth : ”ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?” கடந்த கால் நூற்றாண்டு காலமாக ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் அடிக்கடி விவாதிக்கப்படும் மில்லியன் டாலர் கேள்வி இது.
ரஜினிக்கும் அரசியலுக்குமான முடிச்சு இன்று நேற்று போடப்பட்டது அல்ல. 1995ம் ஆண்டு வெளியாகி ரஜினியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ’பாட்ஷா’ படம்தான் அரசியல் தொடர்பான அவருடைய பேச்சுக்கு பிள்ளையார் சுழிப் போட்டது.
அன்று ஆரம்பித்தது இன்று ரஜினி தேர்தலில் போட்டியிடும் அளவு வளர்ந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பினார்.
காலையிலேயே ஸ்டெல்லா கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்த ரஜினி, சக நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
இது ஒருபக்கம் இருக்க டிவிட்டரில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே எனும் ஹேஷ்டாக் திடீரென டிரெண்டிங்கில் வந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அடுத்த தேர்தலில் ஒருவேளை ரஜினி போட்டியிடும் வகையில் அவருக்கு இளைஞர்களிடையே பலத்த வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.