Thala Dhoni : தோனி, தன் 2 உலக கோப்பை வெற்றிகள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் சிஎஸ்கே என்ற பிராண்ட் மூலம் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்.
இந்த ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தல அவரின் ஓய்வு பற்றி அவர் தான் அறிவிக்க வேண்டும் என்ற பிடிவாத நிலையில் இருப்பவர்கள்.
அதோடு இல்லாமல் தல தோனியின் தற்போதைய சொதப்பலான ஆட்டம் மற்றும் அவரின் வயது பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது .
இப்படிப்பட்ட ரசிகர்கள் இப்பொழுது உச்சத்தில் தங்களது அன்பை எப்படி வெளியிட்டு இருக்கின்றனர் என்றால் இன்று நடக்கவிருக்கின்ற மே .தீ எதிரான 5-வது ஒரு நாள் போட்டி கேரளவில் நடைபெற உள்ளது.
அந்த மைதானத்தில் கேரளா ரசிகர்கள் தல தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட் வைத்து உள்ளது. இதனை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்