Kannana Kanne

Sri Ranjini : தல அஜித்தின் பாடலை கேட்டு தன்னுடைய வயிற்றில் இருந்த குழந்தை தன்னை ஓங்கி உதைத்ததாக சின்னத்திரை நடிகை கூறியுள்ளார்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளியாக வலம் வந்தவர் ஸ்ரீ ரஞ்சனி.

சீரியல் நடிகர் அமித் பார்கவ்வின் மனைவியான இவர் தற்போது எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டுவதில்லை.

அஜித்தா? விஜயா? – திடீரென வைரலான யுவன் ஷங்கர் ராஜா வீடியோ.!

அதற்கான காரணம் என்னவென்றால் ஸ்ரீ ரஞ்சினி தற்போது கர்ப்பமாக உள்ளாராம். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அஜித்தின் பாடலால் நடந்த நிகழ்வை பற்றி பேசியுள்ளார்.

அமித் பார்கவ் நன்றாக பாடுவார் என்பதால் இரவில் தினமும் ஸ்ரீ ரஞ்சினி வயிற்றருகில் சென்று விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடலை பாடுவாராம்.

ஒரு நாள் ரஞ்சினி அடிச்சு தூக்கு பாடலை பாட சொல்ல அமித் பார்கவ்வும் பாடியுள்ளார். அப்போது ரஞ்சினியின் குழந்தை ஓங்கி உதைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்.

Amit Bargav

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.