Thala Ajith Idea to Tamilnadu Government For Clear The Corona Virus
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளின் அதிதீவிரமாக பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா இந்த வைரஸால் எதிர்பாராத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை அதனருகே சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி விட்டது.
குறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழக அரசு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விஜய் பட இயக்குனருக்கு ஏற்பட்ட பரிதாபம்.. உதவிக்கரம் நீட்டிய அஜித் பட தயாரிப்பாளர் – வெளியான அதிர்ச்சித் தகவல்இந்த நிலையில் அஜித் ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட இடங்களில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோனை வைத்து கிருமி நாசினியை தெளிக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.
இதன் மூலம் 15 நிமிடத்தில் 16 லிட்டர் கிருமி நாசினி யை தெளிக்க முடியும் என கூறியுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு அந்த ட்ரோனை வைத்து அதிகம் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் இதன் மூலமாக கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை டாக்டர் கார்த்திகேயன் என்பவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.