ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் பிரியங்கா ரெட்டி என்ற பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் ஈடுபட்ட நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலீசிடம் இருந்து தப்ப முயன்றதால் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.
இதற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் என்கவுண்டர் செய்த போலீஸ் காரர்களுக்கு பாராட்டு தெரிவித்து போஸ்டர் ஒட்டி மதுரையை அதிர வைத்துள்ளனர்.