Thala Ajith : திடீரென தன்னுடைய முடிவை மாற்றி கொண்டு சென்னையில் நடைபெற உள்ள பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் தல அஜித்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வளவு ஏன் தன்னுடைய படங்களின் விழாக்களில் கூட கலந்து கொள்ள மாட்டார்.
உங்க கிட்ட இருந்து ஒரு கதை கிடைச்சுடுச்சு, காப்பி ரைட் பண்ணிடாதீங்க விஜய் – மோகன் ராஜா ட்வீட்.!
மு. கருணாநிதிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தங்களை இது போன்ற அரசியல் விழாக்களுக்கு அழைக்காதீர்கள்.
எங்களது வேலையை செய்ய விடுங்கள் என பகிரங்கமாக பேசினார். அதன் பின்னர் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது ஸ்ரீ தேவியின் குடும்பத்திற்காக தன்னுடைய கொள்கையை மாற்றியுள்ளார் தல அஜித்.
ஆம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் ஸ்ரீ தேவியின் முதல் ஆண்டு நினைவஞ்சலிக்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் தல அஜித் தன்னுடைய குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளார்.