கொரானா நிவாரண நிதியாக அஜித் கொடுத்த தொகை எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Thala Ajith Contribution to Corona Care : கொரானா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பாதுகாப்பு பணிகளை இன்னும் தீவிரப்படுத்த மக்களிடம் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு 2 அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.
பலரும் இதற்காக உதவி வந்த நிலையில் தற்போது அஜித்தும் தன்னுடைய பங்கிற்கு உதவியுள்ளார். மத்திய அரசிற்கு ரூபாய் 50 லட்சமும் மாநில அரசுக்கு ரூபாய் 50 லட்சமும் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சினிமா தொழிலாளர்களைக் கொண்ட பெப்ஸி அமைப்புக்கு ரூபாய் 25 லட்சமும் நிதியாக கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.