சுஷாந்த் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் தான் இருந்திருப்பார் என சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை டாப்ஸி.
Tapsee About Sushant Death : பாலிவுட் சினிமாவில் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
இவர் சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுஷாந்த் மரணத்திற்கு அவருடைய காதலி ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என பலரும் கூறி வந்தனர். சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு போதை மருந்து கடத்தலில் தொடர்புடையதாக போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரியா சக்கரவர்த்தி கைது குறித்து டாப்ஸி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் சுஷாந்த் மட்டும் உயிரோடு இருந்தால் ஜெயிலில் தான் இருந்திருப்பார். ரியா போதைப் பொருளை தேநீரில் கலந்து கொடுத்ததாக வெளியான தகவலுக்கு டாப்ஸி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து விமர்சித்து வருகின்றனர்.