TamilNadu ReElection 2019 | Loke Saba Election 2019 | Chennai | Loke Saba | Election 2019 | Tamil nadu | India | Modi | Re-Polling
TamilNadu ReElection 2019

TamilNadu ReElection 2019 :

சென்னை: தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது.

இதில் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தப்படி, தருமபுரியில் 8 வாக்குச்சாவடியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது தெரியவந்தது.

திருவள்ளூர், கடலூர் என மேலும் 10 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாஹு பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் தேனியில் 2 தொகுதி, ஈரோட்டில் ஒரு தொகுதி என தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்திய போது 46 மையங்களில் தவறு நடந்துள்ளதாக சாஹு குறிப்பிட்டார்.

தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களின் 15 தொகுதிகளில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

இது பற்றி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டதாக கூறிய சாஹு, அங்கு மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து விரைவில் முடிவு வரும் என்று கூறியுள்ளார்.

அதன்படி தருமபுரியில் 8, தேனியில் 2, திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் தலா தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.