Tamil Nadu Rain

TamilNadu Rain : தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழை வெளுக்க போகிறது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் மக்களை வாட்டி வைத்து வருகிறது. குறிப்பாக மே மாத வெயிலுக்கெல்லாம் சூரியன் எவ்வளவு வாட்டி வதைக்குமோ என்ற பயம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகும் இதனால் தமிழகத்தில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரித்து உள்ளது. இது மக்கள் மத்தியில் நிம்மதியையும் மழையின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

ஆனால் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பொதுவாக கோடை காலங்களில் புயல் உருவாகாது.

அப்படியே உருவாகினாலும் அவை தமிழகம் பக்கம் வருவது மிக மிக குறைவு. இதுவரை அப்படி உருவான புயல்கள் வேறு திசையை நோக்கி தான் சென்றுள்ளன.

இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு தான். 50% தான் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து உறுதியான தகவல்களை கூற முடியும் எனவும் கூறியுள்ளார்.

இவர்களில் சென்னை வானிலை மையம் சொல்லும் கணிப்பு பலிக்குமா? அல்லது வெதர் மேன் கணிப்பு பலிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.