trending

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவர் கட்டிட தொழிலாளியின் மகன் 2 வயது குழந்தை சுர்ஜித் வில்சன் நேற்று விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 600 அடி ஆழ்துணை கிணற்றில் விழுந்து விட்டான். விழுந்தவுடன் மண்ணில் உராய்ந்தபடி சிறுவன் ஆழ்துளைக்கிணற்றின் அடிப்பகுதிகு சென்றுவிட்டான்.

எனவே, சிறுவனின் பெற்றோர் பதறியடித்து அங்கு ஓடிச்சென்றனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். 4 பொக்லைன் உள்ளிட்ட 5 எந்திரங்கள் மூலம் 15 அடி வரை குழி தோண்டப்பட்டு நேற்று இரவு முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துலை கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழிக்குள் சிசிடிவி கேமாராவை பொருத்தி சிறுவனை கண்காணித்தும் வருகின்றனர்.

ஆனால், குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே, தற்போது ஐஐடி குழுவின் நவீன கருவி ஆழ்துளை கிணற்றில் செலுத்தும் பணி தொடங்கியது. அதன்பின் இறுதிக் கட்ட முயற்சியாக மெட்ரோ இரயில்வே நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம் சிறுவன் சுஜித்தை மீட்க நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு அதிநவீன கருவிகளுடன் மணப்பாறைக்கு விரைந்துள்ளது.

bore

கடைசியாக வெளியான தகவல் படி சிறுவன் 68 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் #Prayforsurjith என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கின் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஹேஷ்டேக்கில் பலரும் தங்களின் கவலைகளையும், சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர். அதேபோல் முகநூலில் ‘மீண்டு வா சுர்ஜித்’ என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம், பத்தாயிரம் அடி ஆழம் சென்று மீத்தேன் எடுக்கும் நாட்டில் 70 அடி ஆழம் சென்று குழந்தையைக் காப்பாற்ற தொழில்நுட்பம் இல்லை. அரசாங்கம் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.