Tamilnadu Leaders Wishes – சென்னை: பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்.14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை, இன்று காலை தீவிரவாத முகாம்களை குண்டுவீசி தகர்த்தெறிந்தது.
இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகின..
இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு அனைவரிடத்திலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், ‘தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் விமானப்படையின் வீரதீர செயலால் பெருமை அடைவதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்’.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வாழ்த்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு எனது வாழ்த்துக்கள்.
தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களை வணங்குகிறேன் ‘ என கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.