Tamilnadu Governement About Drinking Water
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த கொரானா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்டுவரும் சிறப்பான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தற்போது வைரஸ் தொற்று பல நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.